சிங்கப்பூரில் ஈஸ்டர் தினக் கொண்டாட்டங்கள்

இயேசு கிறிஸ்து செய்த அற்புதங்கள், அனுபவித்த துயரங்கள், துன்பங்கள், அவரின் மரணத் தின் பின்னணி, அற்புதமான உயிர்த்தெழுதல் அனைத்தையும் சித்திரிக்கும் வண்ணம் 'எல்லாம் முடிந்தது' எனும் கருப்பொருளைக் கொண்ட சிறப்பு வெள்ளிக்கிழமை, ஈஸ்டர் நாடகத்தை இரண்டு பாகங்களாக தமிழில் வழங்கியது பிரின்ஸ் சார்ல்ஸ் கிரசெண்டில் அமைந்துள்ள என் இரட்சகர் ஆலயம்.

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக பரிசுத்த வியாழன், பெரிய வெள்ளிக் கிழமை, உயிர்த்தெழுந்த ஞாயிறு ஆகிய தினங்களை முன்னிட்டு சிறப்பு ஆராதனைகளை இந்த ஆலயம் நடத்தி வருகிறது. இயேசு மரித்து மூன்றாம் நாளான ஈஸ்டர் ஞாயிறு அன்று உயிர்த்தெழுந்தது புதிய வாழ்க்கை, மறுவாழ்வு, நம்பிக்கை அனைத்தையும் குறிக்க இனிப்பு வகைகளையும் மிட்டாய்களையும் சபை மக்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர். "இயேசுவைப்போல் நடிக்க அவரைக் குறித்து நிறைய படித் ததோடு நிறைய காணொளி களையும் பார்த்து தயார் செய் தேன். "மேலும், உடலைக் கட்டுடன் வைத்துக்கொள்ள தீவிர உடற் பயிற்சியும் மேற்கொண்டேன்," என்று கூறினார் இயேசு கிறிஸ்து வின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த 46 வயது ஷேன் ஜெயபிரகாஷ்.

நாடகத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில், தமது சீடர்களை முதன்முறையாக சந்திக்கும் உயிர்த்தெழுந்த கிறிஸ்து. செய்தியும் படமும்: திமத்தி டேவிட்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!