தாதியர்களுக்கு எதிராக கை நீளுவதும் வாய் நீளுவதும் அதி கரித்து வருவதாகக் கூறப் படுகிறது என்று சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. உள்ளூரில் வெளியாகும் மருத்துவச் சஞ்சிகையான ஆன் னல்ஸ் அகடமி ஆஃப் மெடிசன் சென்ற நவம்பரில் ஒரு தலையங் கத்தை வெளியிட்டு இருந்தது. சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியர்களில் 10 பேரில் ஏழு பேர் தாக்கப்பட்டதாக அது தெரி வித்தது.
இத்தகைய சம்பவங்கள் இன்னும் அதிகம் என்றும் ஆனால் பலவும் வெளியே தெரி வதில்லை என்றும் கூறப்பட்டது. சுகாதாரப் பராமரிப்புச் சேவை ஊழியர்கள் சங்கத்தின் தலைவி யாக 20 ஆண்டு காலமாக இருந்துவரும் பழுத்த அனுபவம் வாய்ந்த தொழிற்சங்கவாதியான கே. தனலட்சுமி, "இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்தால் அது பற்றி புகார் தெரிவிக்க வேண்டும் என்று மருத்துவமனைகள் தங்கள் ஊழியர்களுக்கு ஊக்கமூட்ட வேண்டும்," என்றார்.