பிரசல்ஸ்: பிரசல்சில் தற்கொலைத் குண்டு தாக்குதல்கள் தொடர்பில் மூவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பயங்கரவாதத்துக்கு எதிராக நேற்று நடக்கவிருந்த பேரணியும் நிறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் பெல்ஜிய போலிசாருக்கு மேலும் நெருக்குதலைக் கொடுக்காமலிருக்கவும் பேரணியைக் கைவிட வேண்டுமென அரசு வேண்டுகோள் விடுத்தது. அரசின் வேண்டுகோளை ஏற்று, பேரணியைக் கைவிடுவதாக அமைப்பாளர்கள் கூறினர். "மக்களின் பாதுகாப்பே அதி முக்கியம்" என்று கூறினார் ஏற்பாட்டாளர் இமானுவெல் ஃபோலன்.
பிரசல்சல்ஸ் விமான நிலையத்திலும் மெட்ரோ ரயில் நிலையத் திலும் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதல்களில் தற்கொலைதாரிகள் மூவர் உட்பட 28 பேர் உயரிழந்தனர். 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். தாக்கு தலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள மூவரில் ஒருவரது பெயர் ஃபைசல் சீ என அடையாளம் காணப்பட்டுள்ளது.
பெல்ஜிய ஊடகம் அவரை ஃபசைல் செஃபு என்றும் தாக்குதல் நடந்த அன்று விமான நிலையக் கண்காணிப்பு கேமராவின் பதிவான படத்தில் காணப் பட்ட, தொப்பியும் இளநிற ஜாக்கெட்டும் அணிந்த ஆடவர் அவர் எனவும் குறிப்பிட்டது. அந்தப் படத்தில் மூவர் பயணப் பெட்டிகளைத் தள்ளிக் கொண்டு செல்வது பதிவாகியுள்ளது. படத்தில் காணப்படும் இப்ராகிம் எல்பக்ரய், நஜிம் லாக்கராய் இருவரும் தற்கொலைதாரிகள் என நம்பப்படுகிறது.
பிரசல்ஸ் நகரில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் பலியானவர்களுக்கு விளக்கேற்றி வைத்து அஞ்சலி செலுத்தும் மக்கள். படம்: ராய்ட்டர்ஸ்