புதுப்படத்தில் பிரபு, ஊர்வசி ஜோடியின் நகைச்சுவை கலாட்டா 'உன்னோடு கா' என்ற புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார் பிரபு. இதில் ஊர்வசியும் அவருடன் இணைந்து அசத்தி உள்ளாராம். படத்தில் நடித்த அனுபவங்களைப் பற்றி அண்மைய பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார் பிரபு. "நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு முழுநீள நகைச்சுவைப் படத்தில் நடித்திருப்பது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இப்படத்திற்காக நான் இரண்டு வித கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறேன். கிராமத்தில் கையில் அரிவாளை தூக்கிக்கொண்டு வெட்டுவதற்குத் துரத்தும் முரடனாக வும் சென்னையில் தன் மகனின் காதலைச் சேர்த்துவைக்க போராடும் பாசமுள்ள தந்தையாகவும் நடித்துள் ளேன்.
"அபிராமி ராமநாதன் கதை, திரைக்கதை எழுதி இருக்கிறார். கதையைக் கேட்டவுடன் இப்படத்தில் நடிப்பது என முடிவு செய்துவிட்டேன். இது போன்ற நகைச்சுவைப் படம் அமைவது அரிதானது. இன்றைய காலகட்டத்தில், ஒரு படத்தை குடும்பத்தினருடன் திரை யரங்குக்குச் சென்று பார்ப்பதும் அரிதாகிவிட்டது.
'உன்னோடு கா' படத்தின் ஒரு காட்சியில் பிரபு, ஊர்வசி.