பிரசல்ஸ்: பெல்ஜியத் தலைநகர் பிரசல்ஸில் நடந்த தாக்குதல் தொடர்பில் சந்தேக நபர்கள் 8 பேரை போலிசார் தீவிரமாகத் தேடி வரும் வேளையில் போலிசாருக்கும் வலதுசாரி ஆர்பாட்டக்காரர்களுக் கும் இடையே மோதல் ஏற்பட்டது. பிரசல்ஸில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்திருப் பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரசல்ஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமானோர் திரண் டிருந்த இடத்தில் ஆர்ப்பாட்டக் காரர்கள் ஒன்றுதிரண்டு இடை யூறு விளைவித்தனர். இதனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து கூட்டத்தினரைக் கலைக்க போலிசார் முயன்றதாகக் கூறப் பட்டது.
இதனால் பிரசல்ஸில் ஞாயிறன்று மேலும் பதற்றம் அதிகரித்தது. ஏற்கெனவே பிரசல்ஸ் நகர மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். சென்ற வாரம் செவ்வாய்க்கிழமை பிரசல்ஸில் உள்ள விமான நிலையத்திலும் மெட்ரோ ரயில் நிலையத்திலும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர். சுமார் 340 பேர் காயம் அடைந்தனர். அத்தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப் பேற்றுக் கொண்டுள்ள நிலையில் பயங்கரவாத சந்தேக நபர்கள் பலரை பிரசல்ஸ் போலிசார் கைது செய்துள்ளனர். இதுவரை 10 பேரை கைது செய்திருப்பதாக போலிசார் கூறி யுள்ளனர். பயங்கரவாத சந்தேக நபர்களைக் கைது செய்ய பிரசல்ஸ் போலிசார் தீவிரத் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
போலிசாருடன் மோதும் ஆர்ப்பாட்டக்காரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்