'போடா போடி' படத்திற்குப் பிறகு விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதியை வைத்து 'நானும் ரவுடிதான்' என்ற படத்தைக் கொடுத்தார். இப்படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து விக்னேஷ் சிவன் பணியாற்றப்போவது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இவர்கள் இணையும் அந்தப் புதிய படத்திற்கு 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்று தலைப்பு வைத்துள்ளனர்.
இந்தத் தலைப்பை வைத்துப் பார்க்கும்போது இதில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கப் போகிறார்கள் என்பது தெரிகிறது. அதனால், இரண்டு பிரபல கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.