சென்னை: தமிழகத்தில் கொலைகளும் கொள்ளைச் சம்பவங்களும் பெருகிவிட்டதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2011 முதல் 2015ஆம் ஆண்டு வரையில் 9,948 படுகொலைகளும் ஒரு லட்சம் கொள்ளை, திருட்டு நிகழ்வுகளும் நடந்துள்ளதாக அவர் பட்டியலிட்டுள்ளார்.
"மதுரையில் அமைச்சரின் அலுவலகத்தில் வெடிகுண்டுகள் வீசப்பட்டதற்கான காரணம் என்னவாக இருந்தாலும், சட்டம் ஒழுங்கு முறையாகப் பராமரிக்கப் படவில்லை என்பதையே இந்த நிகழ்வு வெளிப்படுத்துகிறது. கொலை, கொள்ளைச் சம்பவங் களைக் கட்டுப்படுத்த காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை.
"குற்றங்களைத் தடுக்க முடி யாத தமிழக காவல்துறை, மாநில குற்ற ஆவணக் காப்பகத்தின் இணையதளத்தில் இருந்த குற்றங்கள் தொடர்பான புள்ளி விவரங்களை அகற்றிவிட்டு, தமிழகத்தில் குற்றங்களே நடக்க வில்லை என்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்கி றது," என்று ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.