சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழக பாஜக பலமானதொரு கூட்டணியை அமைக்கும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந் தரராஜன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், இந்தக் கூட்ட ணியானது கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணியை விட பலமானதாக இருக்கும் எனவும் கூறினார்.
"தமிழக சட்டப்பேரவைத் தேர் தல் கூட்டணி தொடர்பான முதல் சுற்று பேச்சுவார்த்தை நட்பு ரீதியாக நடந்து முடிந்துள்ளது. தமிழகத்தில் மாற்று அணி அமைய வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். அந்த மாற்று அணியை உருவாக் கும் வகையில் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது," என் றார் தமிழிசை. வலுவான கூட்டணி அமைத்து பாஜக தேர்தலில் வெற்றி பெறும் என்று குறிப்பிட்ட அவர், அது மக்களுக்குப் பலன் தரும் கூட்டணியாக அமையும் என்றார்.
"கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அமைத்த கூட்டணியை விட பலம் வாய்ந்த அணியை சட்டப்பேரவைத் தேர்தலில் அமைப்போம். தேமுதிக இன்னும் பாஜ கூட்டணியில் தான் இருக்கிறது.