ஸ்ரீனிவாசன், 19
வெங்கட் விஸ்வநாத் ஸ்ரீனிவாசன் தொடக்கநிலை ஆறாம் வகுப்பில் பயின்றபோது முதல்முறையாக விமானத்தில் பயணம் செய்தார். அப்போது விமானங்களைப் பார்த்து வியந்தார். எவ்வாறு இவ்வளவு பெரிய சாதனம் வானில் பறவையைப் போல் சிறகை விரித்துப் பறக்கிறது என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது. தற்போது அவருக்கு 19 வயதாகிறது. இம்மாதம் 2ஆம் தேதி ரிபப்ளிக் பலதுறைத் தொழில்கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் விமான மின்னணுவியல் பாடத்தில் பட்டயம் பெற்றார். சாதாரண நிலைத் தேர்வில் சிறப்பாகச் செய்யாதபோதும் மனம்தளராமல் படித்துப் பட்டயப் படிப்பில் 3.78 புள்ளிகள் பெற்றார். தாம் உருவாக்கிய டிரோனுடன் வெங்கட் (நடுவில்).
படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி