"ஆடி எழும் நாகம் அதை அடி மிதிக் கும் காலம்" என இளமை பருவம் வர் ணிக்கப்பட்டிருந்தாலும் இன்று இள மையும் சற்று சோர்வடைந்தே காணப் படுகிறது. சோர்வுக்குக் காரணம் பள் ளிச்சுமையா பணிச்சுமையா? மொத்தத் தில் சமூகத் தொலைநோக்குப் பார்வையின்றிதான் இளையர்கள் பலர் நாள்தோறும் காலையில் கண்விழிக்கின் றனர். இன்று இதை முடித்துவிட வேண்டும், அடுத்த வாரம் அதைப் படித்துவிட வேண்டும், அடுத்தாண் டுக்குள் நல்ல தேர்ச்சி பெற வேண்டும், இன்னும் நான்காண்டுகளில் பட்டப் படிப்பு முடிந்து நல்லதொரு பணியில் சேர்ந்துவிட வேண்டும், அதன் பிறகு கல்யாணம், குடும்பம் என்று பல இளையர்களின் சிந்தனை ஒரே மாதிரியாகத்தான் காணப்படுகிறது.
அனைவரும் 'தன் குடும்பம், தன் வீடு' என்று இருந்துவிட்டால் நமது சமூகத்திற்காகவும் கலாசாரத்திற்கா கவும் மொழிக்காகவும் யார் சிந்திப்பது?
அன்றைய தினம் தமிழவேள் கோ சாரங்கபாணி சுயம் என்ற சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலோ தேசத் தந்தை லீ குவான் இயூ தன்னைப் பற்றி மட்டும் நினைத்திருந்தாலோ இன் றைய தினம் நமது நிலை எப்படி இருந் திருக்கும்? வருங்காலம் பற்றி அன்றே அவர்கள் யோசித்தனர், அந்த வருங்காலத் தோடு வரக்கூடிய வாய்ப்புகள் பற்றியும் அவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என்றும் நினைக்கத் தொடங்கினர்; நெருக் கடிகள் பற்றியும் அவற்றைச் சமாளிக்கும் வழிமுறைகளையும் சிந்தித்தனர். அந்தத் துடிப்பும் வேகமும் முன்னோக்கிய சிந்தனையும் இன்று நலிந்துகொண்டே வருகின்றன என்றுதான் கூறுவேன் - சிங்கப்பூர்த் தமிழ் இளையர்களைப் பொறுத்தமட்டில்.
அருண் வாசுதேவ் கிருஷ்ணன், இறுதியாண்டு மாணவர், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்