சிங்கப்பூர் இலக்கியப் பரிசு; இறுதிப்பட்டியலில் 50 நூல்கள்

இந்த ஆண்டின் சிங்கப்பூர் இலக் கியப் பரிசுக்கான இறுதிப்பட்டியலில் நான்கு மொழிகளிலும் மொத்தம் 50 நூல்கள் இடம்பெற்றுள்ளன. சிங்கப்பூர் புத்தக மன்றம் ஈராண்டுகளுக்கு ஒருமுறை தமிழ், ஆங்கிலம், சீனம், மலாய் ஆகிய நான்கு மொழிகளிலும் புதினம், கவிதை, புதினமல்லாதவை என மூன்று பிரிவுகளில் இப்பரிசை வழங்கி வருகிறது. இறுதிப் பரிசீலனைக்கான பட்டியலை தேசிய புத்தக மன்றம் நேற்று வெளியிட்டது. தமிழில் மூன்று பிரிவுகளிலும் மொத்தம் 11 நூல்கள் தேர்வுபெற்றுள்ளன.

புதினப் பிரிவில் சித்ரா ரமே‌ஷின் 'ஒரு துளி சந்தோஷம்', எம்.கே.குமாரின் '5.12', பிரேமா மகாலிங்கத்தின் 'நீர்த் திவலைகள்' ஆகிய நூல்களும் கவிதைப் பிரிவில் அ.கி.வரதராஜனின் 'லீ குவான் இயூ பிள்ளைத் தமிழ்', எம்.சேகரின் 'இராவணனின் சீதை' ஆகிய நூல்களும் தேர்வு பெற்றுள்ளன. புதினமல்லாதவை பிரிவில் பாலபாஸ்கரனின் 'கோ.சாரங்கபாணியும் தமிழ் முரசும்: இன்றைய பார்வை', சித்ரா ரமே‌ஷின் 'ஆட்டோகிராப்', எம்.சேகரின் 'எழுத்தும் வண்ண மும்' ஆகியவை தேர்வு பெற்றுள்ளன.

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!