இரு சிறார் அறநிறுவனங்களுக்குத் திரண்ட $75,000 நிதி

ஷாங்ரிலா ஹோட்டலில் கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட SG50 DipCharity Bazaar எனப்படும் அரசதந்திர அறப்பணி சந்தையில் 75,000 வெள்ளி திரட்டப்பட்டது. சிங்கப்பூரின் பொன்விழாவை முன்னிட்டு 40 நாடுகளின் தூதரகங்களிலிருந்து அரசதந்திரிகள் ஒன்று சேர்ந்து இரு சிறார் அறநிறுவனங்களுக்கு நிதி திரட்டினர்.

நிதி திரட்டும் சந்தையில் பல காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டு பல்வகை பொருட்கள் விற்கப்பட்டன. திரட்டப்பட்ட நிதியிலிருந்து தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளி கைகாசு நிதிக்கும் சிங்கப்பூர் சிறார் சங்கத்துக்கும் தலா 37,500 வெள்ளி வழங்கப்படும். நிதி திரட்டை நிறைவு செய்து வைக்கும் வகையில் சிங்கப்பூரில் உள்ள இந்தோனீ சியத் தூதரகத்தில் நேற்று காசோலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனும் அவரது துணைவியாரும் (படம்) கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!