ஷாங்ரிலா ஹோட்டலில் கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட SG50 DipCharity Bazaar எனப்படும் அரசதந்திர அறப்பணி சந்தையில் 75,000 வெள்ளி திரட்டப்பட்டது. சிங்கப்பூரின் பொன்விழாவை முன்னிட்டு 40 நாடுகளின் தூதரகங்களிலிருந்து அரசதந்திரிகள் ஒன்று சேர்ந்து இரு சிறார் அறநிறுவனங்களுக்கு நிதி திரட்டினர்.
நிதி திரட்டும் சந்தையில் பல காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டு பல்வகை பொருட்கள் விற்கப்பட்டன. திரட்டப்பட்ட நிதியிலிருந்து தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளி கைகாசு நிதிக்கும் சிங்கப்பூர் சிறார் சங்கத்துக்கும் தலா 37,500 வெள்ளி வழங்கப்படும். நிதி திரட்டை நிறைவு செய்து வைக்கும் வகையில் சிங்கப்பூரில் உள்ள இந்தோனீ சியத் தூதரகத்தில் நேற்று காசோலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனும் அவரது துணைவியாரும் (படம்) கலந்துகொண்டு சிறப்பித்தனர்.