எஸ். வெங்கடேஷ்வரன்
உள்ளூர் இலக்கியங்களை ஆவணப்படுத்தும் முயற்சிகளில் ஒரு முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் சிங்கப்பூரின் மூத்த தமிழ் எழுத்தாளர்களான திரு வாளர்கள் பி.கிருஷ்ணன், இராம.கண்ணபிரான், மா. இளங் கண்ணன் ஆகியோரின் ஆவணப் படங்கள் வெளியிடப்பட்டன. வாசகர் வட்டம் நடத்திய இந்த வெளியீட்டு நிகழ்ச்சி தேசிய நூலகத்தில் மாலை ஐந்து மணிக்கு நடைபெற்றது.
வாசகர் வட்டம் தயாரித்த ஆவணப்படங்களின் வெளியீட்டு விழாவில் (இடமிருந்து) திருவாளர்கள் மா.இளங்கண்ணன், இராம.கண்ணபிரான், பி.கிருஷ்ணன், தொடர்பு தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்