ஓராண்டு கால புதுப்பிப்பு வேலைகளுக்குப் பிறகு கம்போங் கிளாமில் அமைந்திருக்கும் சுல்தான் பள்ளிவாசல் புதிய வசதிகளுடன் சீரமைக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசலில் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவுற்றதைக் குறிக்கும் விதமாக முதன்மைக் கட்டடத்தில் இருக்கும் பெயர்ப் பலகைக்கல் ஒன்றை பிரதமர் லீ சியன் லூங் நேற்று திறந்து வைத்தார். அவருடன் தொடர்பு, தகவல் அமைச்சரும் முஸ்லிம் விவ காரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான டாக்டர் யாக்கூப் இப்ராஹிம் கலந்துகொண்டார். இந்தப் பள்ளிவாசலை முக்கியமான அடையாளம் என்றும் வீட்டை நினைவுபடுத்தும் இடம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இரண்டு புதிய மின்தூக்கிகள், 390 பேர் அமரக்கூடிய அரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டதுடன் முதன்மைக் கட் டடத்தில் நீராட்டு இடங்களும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
உடைந்த கதவுகள், சன் னல்கள் முன்பு இருந்தது போன்ற வடிவமைப்பிலும் நிறத்திலும் மீண்டும் அமைக்கப் பட்டுள்ளன. தங்க நிறத்திலான குவி மாடங்களுக்கு சிறப்புக் கவனத்துடன் புதியவண்ணப் பூச்சும் செய்யப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பணிகள் தொடங் கியபோது மறுசீரமைப்புக்காக $3.65 மில்லியன் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டது. 1826ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தப் பள்ளிவாசல் 1975ஆம் ஆண்டு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. தேசிய நினைவுச் சின்னங்களுக்கான நிதியில் இருந்து மறுசீரமைப்புக்கான செலவின் ஒரு பகுதியை ஈடுகட்டுவதற்காக $1.02 மில்லியனை தேசிய மரபுடைமைக் கழகம் வழங்கியது.
பள்ளிவாசலின் வரலாறு, பாரம்பரியம் ஆகியவற்றை ஆவணப்படுத்தும் விதத்தில் நேற்றைய நிகழ்ச்சியில் ஒரு புத்தகமும் வெளியிடப் பட்டது.
மறுசீரமைக்கப்பட்ட சுல்தான் பள்ளிவாசலில் பிரதமர் லீ சியன் லூங் (வல மிருந்து இரண்டாவது), அமைச்சர் யாக்கூப் இப்ராஹிம் (வலமிருந்து மூன் றாவது) ஆகியோருடன் சமயத் தலைவர்கள். படம்: பெரித்தா ஹரியான்