மலேசியாவிடம் வீழ்ந்த இந்திய அணி போட்டியின் ஆண்களுக்கான

ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது. நேற்று இரவு நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் அது மலேசியாவைச் சந்தித்தது. இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் இந்தியாவின் ஹமன்பிரீத் சிங் கோல் போட்டு தமது குழுவை முன்னிலைக்குக் கொண்டு சென்றார். ஆனால் ஏழு நிமிடங்கள் கழித்து மலேசியா ஆட்டத்தைச் சமன் செய்தது. இருப்பினும், மலேசியாவின் கொண்டாட்டம் தணிவதற்குள் அடுத்த ஒரு நிமிடத்தில் இந்தியா அதன் இரண்டாவது கோலைப் போட்டது. ஆனால் தனது சாதக நிலையைத் தற்காக்க இந்தியா மீண்டும் தவறியது. ஆட்டம் முடிய ஏறத்தாழ இரண்டு நிமிடங்கள் மட்டுமே இருந்தபோது மலேசியா ஆட்டத்தைச் சமன் செய்தது. இதனால் வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ‌ஷூட்அவுட் நடத்தப்பட்டது.

இதிலும் இரு அணிகளும் விட்டுக்கொடுக்காமல் மாறி மாறி கோல் போட்டன. ஆனால் இந்திய வீரர் பெனால்டி வாய்ப்பைக் கோட் டைவிட 6-7 எனும் கோல் கணக்கில் இந்தியா தோற்றது. இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற மலேசியா கொண்டாட்ட மழையில் நனைய, சோகமே உருவாக வாடிய முகங்களுடன் மைதானத்தைவிட்டு வெளி யேறினர் இந்திய வீரர்கள்.

தமது சக வீரரிடம் பந்தை அனுப்ப முயலும் இந்திய வீரர் வருண் குமாரைத் (வலது) தடுக்க விரைகிறார் மலேசியாவின் துங்கு அகமது தஜுதீன். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!