பெங்களூருவில் ஒரு பெண்ணை கடத்தி வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டுகிறார் அனுராக் காஷ்யப். இந்த விஷயம் சிபிஐ அதிகாரியாக இருக்கும் நயன்தாராவிற்குத் தெரிய, அதை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். ஆனால், அனுராக் பணம் பெற்றுக் கொண்டு அந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்து விடுகிறார். மேலும் இதுபோன்று கொலை கள் அடிக்கடி நடக்கும் என்று நயன்தாராவிற்குத் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுகிறார். இத னை யடுத்து தொடர்ந்து கொலை கள் நடக்கிறது. ஆனால், நயன் தாரா அனுராக்கை கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கிறார். இது ஒருபுறம் நடக்க, மற்றொரு புறம் சென்னையில் நயன்தாராவின் தம்பியான அதர்வா டாக்டராக இருக்கிறார்.
அதே பகுதியில் இருக்கும் மாடலிங் பெண்ணான ராஷி கன்னாவிற்கும் இவருக்கும் நட்பு ஏற்படுகிறது. இவர்களின் நட்பு காதலாக மாறுகிறது. இருவரும் சொல்லிக் கொள்ளாத நிலையில், சிறு பிரச்சினையில் பிரிகிறார்கள். இவர்கள் இருவரும் பெங்களூ ருவில் சந்திக்கிறார்கள். அப்போது ராஷி கன்னாவை அனுராக் கடத்து கிறார். இந்த கடத்தலில் அதர்வாவை சிபிஐயிடம் சிக்க வைத்து விடுகிறார். தம்பி சிபிஐ யிடம் மாட்டிக்கொண்டதால் நயன் தாராவிற்கு வேலையில் பிரச்சினை ஏற்படுகிறது. இறுதியில் அனுராக் காஷ்யப்பை நயன்தாரா எப்படி பிடித்தார்? சிபிஐ பிடியில் இருந்து அதர்வா தப்பித்தாரா? ராஷி கன்னா என்ன ஆனார்? என்பதே படத்தின் மீதிக்கதை. சிபிஐ அதிகாரியாக படத்தில் கம்பீரமாக நடித்திருக்கிறார் நயன் தாரா. தன்னுடைய கதாபாத்திரத் திற்கு கச்சிதமாகப் பொருந்தி, அதற்கு ஏற்றாற்போல் திறமை யான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கி றார். அனுராக்கை எப்படியாவது பிடித்தாக வேண்டும்.
தம்பியைக் காப்பாற்ற வேண்டும் என நடிப்பில் வித்தியாசம் காண்பித்திருக் கிறார். வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் அனுராக் காஷ்யப். தமிழ்த் திரையுலகில் இன்னும் பல படங்களில் வில்லனாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கலாம். நயன்தாராவின் தம்பியாக வரும் அதர்வா, இளமைத் துள்ள லு டன் சுறுசுறுப்பாக நடித்திருக் கிறார். ராஷி கன்னாவுடனான காதல் காட்சி களில் ரசிக்க வைத்திருக் கிறார். சிறப்புத் தோற்றத்தில் சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார் விஜய் சேதுபதி. இவரின் கதாபாத்திரம் படத்தின் ஓட்டத் திற்கு துணை நிற்கிறது. அது போல் நயன்தாராவிற்கு குழந்தை யாக நடித்திருப்பவரும் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார்.