சோமாலியா தலைநகர் குண்டுவெடிப்பில் மூன்று பேர் பலி, 14 பேர் காயம்

சோமாலிய தலைநகரில் தற்கொலையாளி ஒருவன் தன்னைத் தானே வெடித்துக்கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவத்தில் மூன்று வீரர்கள் கொல்லப்பட்டனர். பதினான்கு பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் ஆறு குழந்தைகளும் அடங்குவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதலால் அருகில் இருந்த வீடுகளும் சேதமடைந்தன. பள்ளிவாசல் ஒன்றின் கூரையும் உடைந்து சிதறியது. அல்- ஷாபாப் எனும் போராளி அமைப்பு தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அரசாங்க அலுவலகத்தில் நுழைய முயற்சி செய்த வெடிகுண்டு நிரப்பிய காரை தடுத்து நிறுத்தியபோது மூன்று வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று உள்ளூர் அதிகாரியான சாலே ஹசான் உமர் தெரிவித்தார். படம்: ஈபிஏ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!