‘ஆதாரத்தின் அடிப்படையில் லிம் மீதான ஊழல் குற்றச்சாட்டு கைவிடப்பட்டது’

கோலாலம்பூர்: மலேசியாவில் நிதி அமைச்சர் லிம் குவான் எங் மீதான ஊழல் வழக்கு கைவிடப்பட்டதற்கான காரணத்தை அரசாங்கத் தரப்பு துணை வழக்கறிஞர் முகமட் ஹனாபியா ஸக்ரியா விளக்கியுள்ளார். அந்த வழக்கு விசாரணையின்போது சாட்சியம் அளித்தவர்கள் கூறிய உண்மைகள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையிலேயே அந்த வழக்கு கைவிடப்பட்டதாக அவர் கூறினார். லிம் மீதான குற்றச்சாட்டை கைவிட எடுக்கப்பட்ட முடிவு அரசியல் நோக்கம் கொண்டது அல்ல என்று அவர் கூறினார். அத்துடன் அந்த வழக்கை கைவிட எடுக்கப்பட்ட முடிவில் அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரி டோமி தோமஸ் சம்பந்தப்பட்டுள்ளார் என்று கூறப்படுவதை அவரது அலு வலகம் நிராகரித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட லிம் மற்றும் வணிகர் பாங் கி கூன் முன்வைத்த உண்மைகள் மற்றும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்தபோது கிடைத்த புதிய ஆதாரங்கள் அடிப்படையில் அவர் களுக்கு எதிரான வழக்கைக் கைவிடும் முடிவைத் தான் மட்டுமே எடுத்ததாக முகமட் ஹனாபியா ஸக்ரியா கூறினார். நடுநிலை தவறாமல் சட்டத்தை தான் பின்பற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!