இளம் நாயகி சாய் பல்லவியை டுவிட்டர் தளத்தில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது. இது மலையாளத் திரையுலகத்தினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. 'பிரேமம்' மலையாளப் படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவர் சாய்பல்லவி. இதையடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு என மும்மொழிப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் மிகக் குறுகிய காலத்தில் டுவிட்டரில் இவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்துள்ளது. இது சாய் பல்லவிக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. தன் மீது இந்தளவு அன்பு வைத்துள்ள ரசிகர்கள்தான் தம்மை வாழ்க்கையில் தற்போதுள்ள நிலைக்கு அழைத்து வந்துள்ளதாகக் குறிப்பிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சாய் பல்லவி. தற்போது தமிழில் சூர்யாவுடனும் தனுஷுடனும் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்து லட்சம்: நன்றி கூறும் சாய்பல்லவி
6 Sep 2018 08:34 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Sep 2018 07:23
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!