ராஜீவ் கொலை: ஏழு பேரின் விடுதலை தமிழக அரசு கையில்

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஏழு பேரை விடுவிப்பது குறித்து தமிழக அரசே முடிவுசெய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இது குறித்து முடிவெடுப்பதற்கான அதிகாரம் தமிழக ஆளுநருக்கு உள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டு உள்ளது. பேரறிவாளன், சாந்தன் உட்பட ஏழு பேரையும் விடுவிப் பது தொடர்பான வழக்கு உச்ச நீதி மன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. இந்நிலையில் ஏழு பேரையும் விடுவிப்பது தொடர்பாக அன்றைய முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார்.

ஆனால், ராஜீவ் கொலை வழக்கை சிபிஐ விசாரித்ததால் அதில் தமிழக அரசு தலையிட எந்தவித அதிகாரமும் இல்லை என மத்திய அரசு உச்ச நீதி மன்றத்தில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. தண்டனை பெற்ற ஏழு பேரை விடுதலை செய்யக் கோரி தமிழக அரசு நிறைவேற்றிய தீர் மானம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தமிழக ஆளுநருக்கு இருப்பதாக உச்ச நீதிமன்றம் கருதுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே, ஏழு பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு ஆளு நருக்குப் பரிந்துரை செய்யலாம் என்றும், கடந்த 2016ஆம் ஆண்டு இது தொடர்பாக தமிழக அரசு கொடுத்துள்ள மனு மீதும் ஆளுநரே முடிவெடுக் கலாம் என்றும் நீதிபதிகள் தீர்ப் பளித்துள்ளனர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசார கூட்டத்தில் படுகொலை செய்யப் பட்டார். இந்த வழக்கில் ஏழு பேர் தண்டனை பெற்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!