பிரேசிலில் முன்னணி அதிபர் வேட்பாளருக்கு கத்திக்குத்து

ரியோடி ஜெனிரோ: பிரேசிலில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள வேளையில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னணி அதிபர் வேட்பாளர் ஜயர் போல்சனரோ கத்தியால் தாக்கப்பட்டார். தென்கிழக்கு மாநிலமான மினாஸ் ஜெராய்ஸ் நகரில் நடந்த பிரசாரக் கூட்டத்தின் போது தீவிர வலதுசாரி அரசி யல்வாதியான ஜயர் போல்சன ரோ கத்தியால் தாக்கப்பட்டார்.

தாக்குதலில் அவரது கல்லீரல் மற்றும் குடலில் ஏற்பட்ட காயங் களுக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் கூறினர். தன்னுடைய நிலைபாடுகளால் பிரேசிலில் பலரையும் சின மடையச் செய்த சர்ச்சைக்குரிய இந்த அரசியல்வாதி, அண்மைய கருத்துக் கணிப்புகளில் மக்களின் வலுவான ஆதரவைப் பெற்றிருந்தார்.

அதிபர் தேர்தலில் போட்டி யிடுவதற்கான தடையை மாற்றும் முயற்சியில் முன்னாள் அதிபர் லூலா டி சில்வா தோல்வி யடைந்தால், அடுத்த மாதம் நடைபெறுகின்ற அதிபர் தேர்தலில் ஜயர் போல்ச னோருக்கு அதிக வாக்குகள் கிடைக்கலாம் என கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.

பிரேசிலில் அதிபர் வேட்பாளர் ஜயர் போல்சனரோ கத்தியால் தாக்கப்பட்டதும் அவரைக் காப்பாற்ற அவரது ஆதரவாளர்கள் அவரை மேலே தூக்கினர். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!