லொம்போக்கில் பலருக்கு மலேரியா காய்ச்சல்

ஜகார்த்தா: அடுத்தடுத்து உலுக் கிய நிலநடுக்கங்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட இந்தோனீசியாவின் லொம்போக் தீவில் தற்போது மலேரியா காய்ச்சல் வெகுவாக பரவி வருவதாக மேற்கு லொம்போக் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சுற்றுலாத் தீவான லொம்போக் கில் உள்ள நான்கு வட்டாரங்களில் சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 103 பேருக்கு மலேரியா காய்ச்சல் தொற்றியிருப்பதாக உயர் அதிகாரி ஒருவர் கூறி யுள்ளார்.

மலேரியா காய்ச்சலால் பாதிக் கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவ தாகவும் இதனால் அக் காய்ச்சலால் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ள குனங்சாரி வட்டாரம் தொற்று நோய் பரவும் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் மேற்கு லொம்போக் சுகாதார அமைப்பின் தலைவர் ரஹ்மான் சனன் கூறினார். அப்பகுதியில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

இந்தோனீசியாவின் லொம்போக் தீவில் உள்ள தற்காலிக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுடன் அவர்களின் குடும்பத்தினரும் தங்கியுள்ளனர். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!