தலையில் துப்பாக்கிச்சூட்டு காயமடைந்த தேசிய சேவையாளர் மரணம்

கடந்த வாரம் தலையில் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் காணப்பட்ட முழுநேர காவல்துறை தேசிய சேவையாளர் நேற்று உயிரிழந்தார். உலு பாண்டான் ரோட்டில் உள்ள பாதுகாப்பு தளபத்திய அலு வலகத்தில் கடந்த திங்கட்கிழமை அந்த 23 வயது தேசிய சேவை யாளர் காயமுற்றிருந்ததாக காவல் துறை நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

அன்று காலை 8 மணிக்கு வேலைக்கு வந்த அவர் ஆயுதப் பாதுகாப்பறையிலிருந்து தமது சேவைக்குப் பயன்படும் கைத் துப்பாக்கியை எடுத்துச் சென்ற தாகக் கூறப்பட்டது. பிற்பகலில் ஓய்வெடுக்கச் சென்ற அவர், 3.20 மணிவாக்கில் துப்பாக்கிச்சூட்டு காயத்துடன் காணப்பட்டதாக அறிக்கை கூறு கிறது. அவரது சேவை கைத்துப்பாக்கி அவரது அருகில் கிடந்தது. தேசிய பல்கலைக்கழக மருத்து வமனைக்குக் கொண்டு செல்லப் பட்டபோது அவர் சுயநினைவின்றி இருந்தார்.

அவர் காயமடைவதற்கு சற்று நேரம் முன்னால் கைபேசி அல்லது தொலைபேசியில் அவர் யாருடனோ வாக்குவாதம் செய்து கொண்டிருந் ததாக குற்றப் புலனாய்வுத் துறை நடத்திய ஆரம்பக் கட்ட விசார ணையில் தெரிய வந்தது. இச்சம்பவம் வேலை தொடர் பானதல்ல என்று 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' அறிகிறது. இயற்கைக்கு மாறான மரணம் என்று வகைப்படுத்தியுள்ள போலி சார், சம்பவத்திற்கான சூழ்நிலை குறித்து கவனத்துடன் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் குறிப் பிட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!