பசுமையான சிங்கப்பூர் குறித்து கலந்துரையாடல்

சிங்கப்பூரைப் பசுமையாக வைத்திருப்பது குறித்து 50க்கும் மேற்பட்டோர் தங்கள் கருத்துகளை நேற்று நடைபெற்ற சிங்கப்பூரின் எதிர்காலம் (SGfuture) பற்றிய கலந்துரையாடலில் தெரிவித்தனர். சிங்கப்பூரின் இயற்கை வளம் மிக்க இடங்களை எவ்வாறு பயன் படுத்தலாம் என்பது குறித்தும் 'நமது எதிர்காலம்' கண்காட்சியில் அவர்கள் கலந்துரையாடினர்.

சிங்கப்பூரில் உள்ள பூங்காக் கள், நீர்நிலைகள், நீர்த்தேக்கங்கள் ஆகிய இடங்களை மேம்படுத்தும் வழிகளைக் காண நேற்று நடத்தப் பட்ட கலந்துரையாடலுக்கு சிங்கப் பூரர்கள் வரவேற்கப்பட்டிருந்தனர். சிங்கப்பூரின் இயற்கை வளங் களை வடிவமைப்பதில் சமூகத்தின் பங்கு குறித்தும் கலந்துரையாடல் நிகழ்ந்தது. தோட்டத்தில் நகரம், துடிப்பான சமூக இடங்கள், பசுமைத் திட்டத்துக்கு உட்பட்ட நகரங்கள், கருணை உணர்வுட னான வாழ்க்கை முறை, பசுமை யான சுற்றுப்புறத்தைப் பேணிக் காக்கும் கலாசாரம் ஆகிய நான்கு கருப்பொருட்களில் கவனம் செலுத்தப்பட்டது.

கலந்துரையாடலில் பேசிய சுற்றுப்புற, நீர்வள, சுகாதார மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர், சிங்கப்பூர் வளர்ச்சி கண்டு வரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இயற்கை வளங்கள் மிக்க இடங்கள் எவ்வாறு மாற்றம் அடைந்துள்ளன என்பது குறித்து தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!