தமிழவேல்
பல ஆண்டுகளாகவே தைப்பூசத் திருவிழாவன்று இசைக் கருவிகள் வாசிக்க போதிய அனுமதி இல்லை, காவடிக்கான கட்டணம் அதிகம் என்றெல்லாம் குறை பட்டுக் கொண்டவர்களுக்கு அடுத்த வாரம் நடைபெறவுள்ள இவ்வாண்டின் தைப்பூசத் திருவிழா ஓர் இனிய அனுபவமாக அமையும். இந்த ஆண்டு பக்தர்களுக்குத் தைப்பூசத் திருவிழாவின் உணர்வு மேலோங்கும் விதமாக தைப்பூச ஊர்வலம் நடைபெறும் கிட்டத்தட்ட 4 கிலோமீட்டர் தூர வழி நெடுகிலும் 10 இடங்களில் இசை வாசிக்கப்படும் அல்லது ஒலிக்கும்.
அதனுடன் தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலுக்குச் செல்லும் பெண்கள், சிறார்கள், முதியோர் ஆகியோர் இன்னும் எளிதாக கோயிலுக்குள் சென்று தரிசனம் பெறலாம். அதற்கு ஏதுவாக அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலுக்குச் செல்ல கிளமென்சியூ அவென்யூ நெடுகிலும் பெண்கள், சிறுவர்கள், முதியோர் குடும்பத்துடன் செல்ல தனி தடம் அமைக்கப்படும். இவை இவ்வாண்டில் அறி முகப்படுத்தப்பட்ட புதிய மாற்றங் களில் சில.
கூடுதல் செய்தி: வில்சன் சைலஸ்