சென்னை: பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை உயர்த்தியது நியாயமற்ற செயல் என தமிழக முதல்வர் ஜெய லலிதா விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், வரி உயர்வை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். "உலகச் சந்தையில் நிலவும் பெட் ரோலியப் பொருட்களின் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங் கள் பெட் ரோல், டீசல் ஆகியவற்றின் விலை களைக் குறைக்கவில்லை.
பெயரளவில் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்க, உடனே மத்திய அரசும் பெட்ரோலுக்கான கலால் வரியை லிட்டர் ஒன்றுக்கு 75 காசுகள் வீதமும், டீசலுக்கான வரியை லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் வீதமும் உயர்த்தி உள்ளது," என ஜெயலலிதா கூறியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த 2014 நவம்பர் முதல் பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை உயர்த்தாமல் இருந்திருந்தாலே இன்று அவற்றின் விலைகள் 12 ரூபாய் அளவிற்கு குறைந்திருக்கும் என்று கூறியுள்ள அவர், முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு கடைப்பிடித்த தவறான விலை நிர்ணயக் கொள்கை மாற்றிய மைக்கப்பட வேண்டும் என்று தாம் பலமுறை தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.