மதுரை: அமைச்சர் செல்லூர் ராஜுவின் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவங்கள் தொடர்பில், மதுரை அதிமுக நிர்வாகி ஒருவரது மனைவியிடம் காவல்துறையினர் தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர் கடந்த 9ஆம் தேதியன்று அமைச்சரது அலுவலகங்கள் மீது இரவு நேரத்தில் பெட்ரோல் குண்டு கள் வீசப்பட்டன. இது திமுகவினர் செய்த சதி வேலை என அமைச்சர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக அண்ணா தொழிற் சங்கப் பேரவை இணை செயலரும் அதிமுக மேற்கு தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான பசும்பொன் பாண்டியனின் மனைவியுமான ஜெயலட்சுமியிடம் போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக அமைச்சர் தரப்பி லிருந்து தங்களுக்கு மிரட்டல் வருவதாக ஜெயலட்சுமி புகார் எழுப்பி இருந்தார். மேலும் போலி சில் புகார் மனுவும் அளித்திருந்தார். "எங்கள் வீட்டை மர்ம நபர்கள் 'வேவு' பார்க்கின்றனர். அவர்கள் அமைச்சரின் ஆதரவாளர்கள். குண்டு வீச்சு விசாரணை பெயரில் போலிசார் எங்களைத் தொந்தரவு செய்கின்றனர்," என்று ஜெயலட்சுமி குற்றம்சாட்டியுள்ளார்.