காலாங் ஆற்றில் நேற்றுக் காலையில் நடந்த 2016 சிங்கப்பூர் நெடுந்தூரப் படகோட்டும் போட்டியில் இதுவரையில் இல்லாத எண்ணிக்கையில் 700 போட்டியாளர்கள் பங்கேற்றனர். ஏழு வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட போட்டியாளர்கள் தெளிந்த நீல வானின் கீழ் 'சிங்கப்பூர் ஃப்ளையர்' உள்ளிட்ட முக்கிய இடங்களைக் கடந்து 4 கிலோமீட்டர் முதல் 28 கிலோமீட்டர் தூரம் வரை உற்சாகமாகப் படகைச் செலுத்தினர். கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தின ராகப் பங்கேற்றார். அவர் தங்கப் பதக்க வெற்றியாளர்களுடன் பட கோட்டும் நடவடிக்கையிலும் ஈடுபட்டார்.
14வது முறையாக நடைபெறும் இந்தப் போட்டிகளில் சிறுவர்களுக்கான படகோட்டும் பிரிவில் 42 சிறுவர்கள் பங்கேற்றனர். மெக்ரிச்சி நீர்த்தேக்கத்தில் வார இறுதியில் பிள்ளைகளுக்குப் படகோட்டும் பயிற்சி அளித்து வரும் 'கிட் இன் எ கயாக்' திட்டத்தினர் இந்தப் போட்டிப் பிரிவுக்கு ஏற்பாடு செய்திருந்த னர். சிறுவர்களுக்கான படகோட் டும் போட்டியில் ஹென்ரி பார்க் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த மேத்யூ இங், 11, முதல் இடத்தைப் பிடித்தார். சிறுமிகளுக்கான படகோட்டும் போட்டியில் சிங்கப்பூர் சீனப் பெண்கள் பள்ளியைச் சேர்ந்த டான் லீ ஆன், 11, முதல் இடத்தைப் பிடித்தார்.
2016 சிங்கப்பூர் நெடுந்தூரப் படகோட்டும் போட்டி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ (இடமிருந்து இரண்டாவது) தங்கப் பதக்க வெற்றியாளர்களுடன் படகோட்டும் நடவடிக்கையிலும் ஈடுபட்டார். படம்: எஸ்பிஎச்