மெல்பர்ன்: மெல்பர்னில் நேற்று நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டியில் மேக்ஸ்வெல் 83 பந்தில் 8 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 96 ஓட்டங்கள் குவித்து ஆட்டத்தின் போக்கை மாற்றி ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற வைத்தார். ஆஸ்திரேலியா 49.1 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 296 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலியா ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3=0 எனக் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. முதலில் பந்தடித்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 295 ஓட்டங்கள் குவித்தது. விராத் கோஹ்லி 117 ஓட்டங்களும் ரகானே 50 ஓட்டங் களும் தவான் 68 ஓட்டங்களும் சேர்த்தனர். 296 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது.
மார்ஷ்-ஸ்மித் ஜோடி நிலை யான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஸ்மித் 41 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார். மார்ஷ் அரை சதம் அடித்துச் சிறப்பாக விளையா டினார். 62 ஓட்டங்கள் எடுத்த நிலையில் இஷாந்த் சர்மா பந்தில் அவர் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த பெய்லியை டோனி சிறப்பான வகையில் 'ஸ்டம்பிங்' செய் தார். பெய்லி ஆட்டமிழந்தபோது ஆட்டம் இந்தியாவிற்குச் சாதகமான வகையில்தான் இருந்தது.
கடைசி நேரத்தில் விக்கெட் சரிவைத் தடுத்து, அபாரமாக ஆடி ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி தேடித்தந்த மேக்ஸ்வெல். படம்: ஏஎஃப்பி