திமுக தலைவர் கருணாநிதி நீண்ட காலத்திற்குப் பிறகு நேற்று நீதிமன்றம் சென்றார். 92 வய தாகும் அவர் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடுத்துள்ளார். வழக்கு தொடர் பான ஆவணங்களைப் பெற்றுக் கொள்ள கருணாநிதிக்கு சென்னை உயர்நீதிமன்றத்திலுள்ள முதன்மை அமர்வு அழைப்பாணை அனுப்பி இருந்தது. கடந்த நவம்பர் மாதம் ஜெய லலிதாவைக் கடுமையாக விமர் சித்து பிரபல வார இதழ் ஒன்றில் வெளியான கட்டுரையின் ஒரு பகுதியை 'முரசொலி' நாளிதழில் கருணாநிதி அறிக்கையாக வெளி யிட்டிருந்தார். எனவே அவர் மீதும் முரசொலி ஆசிரியர் செல்வம் மீதும் அவதூறு வழக்கு தொடுக் கப்பட்டது.
வழக்கமாக இதுபோன்ற வழக் குகளில் நீதிமன்றத்துக்கு நேரடி யாகச் சென்று முன்னிலையாவதை கருணாநிதி தவிர்த்து வந்தார். அவர் சார்பாக அவரது வழக்கறி ஞர்களே முன்னிலையாவது வழக் கம். ஆனால், இந்த வழக்கில் தாம் நேரடியாக நீதிமன்றம் செல்ல இருப்பதாகக் கடந்த வாரமே கருணாநிதி தெரிவித்திருந்தார்.
நீதிமன்றம் சென்ற கருணாநிதியுடன் அவரது மகன் ஸ்டாலின், மகள் கனிமொழி உள்ளிட்டோர் இருந்தனர். படம்: இணையம்