பெட்டாலிங் ஜெயா: கோலாலம்பூர் நூலகத்தில் நேற்று காலையில் தீவிபத்து ஏற்பட்டதைத் தீயணைப்பு, மீட்புத் துறை இயக்குநர் அஸிசான் இஸ்மாயில் உறுதி செய்தார். டாட்டரான் மெர்டேகாவில் இந்த நூலகம் அமைந்துள்ளது. இந்தத் தீவிபத்தால் எந்த உயிரிழப்பும் இல்லை என்று தெரிவிக் கப்பட்டது. காலை மணி சுமார் 10.18 க்கு ஓர் அவசர அழைப்பு வந்ததாக தீயணைப்பு, மீட்புத் துறையின் தலைமை தளபதி அம்டான் மஹாட் தெரிவித்தார். அடுத்த ஏழாவது நிமிடத்தில் மீட்புக் குழு சம்பவ இடத்தை அடைந்தது. ஹங் துவா, கேஎல்சிசியிலிருந்து முப்பத்து ஒன்பது தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.
"காலை மணி 10.35 க்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 10.49க்கு தீ முழுமை யாக அணைக்கப்பட்டு விட்டது," என்றார் அம்டான் மஹாட். அங்கே நடந்து கொண்டிருந்த உலோகப் பற்றவைப்புப் பணியின் போது உண்டான தீப்பொறியே அந்தத் தீவிபத்துக்குக் காரணமாக அமைந்திருக்க லாம் என்று நம்பப்படுகிறது. தீவிபத்தினால் நூலகக் கட்டடம் பாதிக்கப்பட்டது என்று நூலகர் ஒருவர் கூறினார்.