நாடாளுமன்றத்தில் இன்னும் நிரப்பப்படாத ஒரு தொகுதி யில்லா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் தம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று பாட்டாளிக் கட்சியின் திருவாட்டி லீ லி லியன் கூறிவிட்டதால், அதைக் காலியாக விடும்படி அக்கட்சி நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றை நேற்று தாக்கல் செய்துள்ளது.
மேலும், அந்த இடத்துக்கு அக்கட்சியின் மற்றொரு வேட் பாளரான இணைப் பேராசிரியர் டேனியல் கோவைப் பரிந் துரைக்க விரும்புவதாகவும் அக் கட்சி அந்தத் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது. இத்தகவலை பாட்டாளிக் கட்சியின் இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்த அறிக்கை மூலம் தெரிவித் துள்ளார் அக்கட்சியின் தலைவர் சில்வியா லிம்.