சிங்கப்பூரர்களின் வாழ்க்கையை மேம்படுத்தி சிங்கப்பூருக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே நல்ல அரசாங்கம் என தொழிலாளர் இயக்கத் தலைவரும் பிரதமர் அலுவலக அமைச்சருமான சான் சுன் சிங் கூறியுள்ளார். அதற்கு, நம்பிக்கை, மரியாதை, பணிவு ஆகியவற்றால் மட்டுமே அடையக்கூடிய கூட்டு நட வடிக்கை, பொறுப்பு, தலைமைத் துவம் ஆகியவை தேவை எனவும் அவர் குறிப்பிட்டார். கொள்கை ஆய்வுக் கழகத்தால் ஆண்டுதோறும் நடத்தப் படும் 'சிங்கப்பூர் பெர்ஸ்பெக்டிவ்' கருத்தரங்கின் இவ்வாண்டு நிகழ்ச்சியில் திரு சான் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.
SG100 பயணத்தை நாடு தொடங்கியிருக்கும் இவ்வேளையில் சிங்கப்பூரராக இருப்பதற்கான அர்த்தம் பற்றிய கருத்துகளைச் சேகரிக்கும் நோக்கில் இவ்வாண்டுக்கான கருத்தரங்கு, தேசிய உறுதிமொழியின் முதல் சொல் லான 'நாம்' என்பதைக் கருப் பொருளாகக் கொண்டிருந்தது. கலந்துரையாடலில் பங்கேற்ற 800 பேரிடையே பேசிய திரு சான், சமூகப் பன்முகத்தன்மையுடன், படித்தவர்களான, அரசியல் ஆர்வம் மிக்கவர்களான குடிமக்களுக்கு சிங்கப்பூர் எவ்வாறு சிறந்த நடைமுறை ஆட்சியை வழங்க முடியும் என்பது குறித்து விவாதித்தார்.