பாரிஸ் நகரில் உள்ள ஒரு ரிட்ஸ் ஹோட்டலில் நேற்று பயங்கர தீ மூண்டதாகவும் தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை என்றும் தீயணைப் பாளர்கள் கூறினர். புதுப்பிப்புப் பணிகளுக்காக அந்த ஹோட்டல் மூடப் பட்டிருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். அந்த ஹோட்டல் கட்டடத்தின் மேல்மாடியில் தீ மூண்டதாக தீயணைப்புப் படைப்பிரிவின் பேச்சாளர் கூறினார்.
அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மூண்ட தீயை அணைக்க 60 தீயணைப் பாளர்கள் நீண்ட நேரம் போராடியதாகவும் 15 தீயணைப்பு வண்டிகள் தீயை அணைப்பதில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அதி காரிகள் கூறினர். அந்த ஹோட்டலின் மற்ற மாடிகளுக்கு தீ பரவாமல் தடுக்க தீயணைப்பாளர்கள் துரிதமாகச் செயல்பட்டனர்.
பாரிஸ் ஹோட்டலில் மூண்ட தீயை அணைப்பதில் தீயணைப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி