மோடி மன்னிப்பு கோர கெஜ்ரிவால் வலியுறுத்து

ஹைதராபாத்: தலித் மாணவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பில் பிரதமர் மோடி பகிரங்க மன்னிப்பு கோர வேண்டுமென டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலி யுறுத்தி உள்ளார். நடந்த சம்பவத்துக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர பிரதமர் தயங்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்த ரோஹித் வெமுலா என்ற தலித் மாணவர் அண்மையில் தற்கொலை செய்துகொண்டார். இதை யடுத்து அங்கு பல்வேறு தரப்பி னரும் போராட்டத்தில் குதித் துள்ளனர்.

பாரதிய ஜனதாவுக்கு ஆதர வான அமைப்பைச் சேர்ந்தவர்க ளுக்கு சாதகமாக பல்கலைக் கழகம் செயல்படுவதாகவும் அதன் எதிரொலியாகவே ரோஹித் தற்கொலை செய்து கொள்ள நேரிட்டது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு, ரோஹித் வெமுலா உட்பட 5 மாண வர்களை பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கியது.

பின்னர் பல்கலைக்கழக விடுதியில் இருந்தும் அவர்கள் வெளியேற் றப்பட்டனர். இதனால் மன முடைந்த ரோஹித் தனது விடுதி அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!