வனிதா மணியரசு
மாணவர்களின் பிரிக்கமுடியாத அங்கமாகிவிட்ட கைபேசிகளின் வழியாக பாரம்பரியம் மிக்க பொங்கல் திருநாளைப் பற்றியும் தமிழர் பண்பாடு பற்றியும் அறிந்துகொள்ள ஆவன செய்தது உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொங்கல் திருவிழா. உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையமும் எட்டு உயர்நிலைப் பள்ளிகளும் இணைந்து இவ்விழா விற்கு ஏற்பாடு செய்திருந்தன. புதுமையான முறைகளில் கற்பித்து மாணவர்களிடையே பொங் கல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே விழாவின் முக்கிய நோக்கம். மாணவர்கள் அனுபவத்தின் வழி கற்க பல வித்தியாசமான நடவடிக்கைகள் இருந்தன.
கூடிப் பொங்கல் வைத்தல், மண்பானை அலங்கரித்தல், மின்னூல் தயார் செய்தல் போன்ற நடவடிக்கைகள் பொங்கல் பற்றிய பல விஷயங்களை மாணவர்களுக்குப் புகட்டின. பொங்கல் செய்யப் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களுக் கான பாரம்பரிய விளக்கம், உழவர்களின் முக்கியத்துவம் போன்றவை மாணவர்களுக்கு உணர்த்தப்பட்டது. பழங்காலத்தில் ஏட்டுக்கல்வி மட்டுமின்றி கலைகளுக்கும் தமிழர்கள் அதிக முக்கியத்துவம் அளித்தனர் என்பதை உணர்த்தியது மண்பானை அலங்கரிப்பு நடவடிக்கை. 'வேர்களைத் தேடி' என்ற புதையல் வேட்டை அங்கம் மாணவர்களை மிகவும் உற்சாகப் படுத்தியது. தொழில்நுட்பம் சார்ந்த இந்த அங்கத்தில் மாண வர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டனர். மூலிகைத் தோட்டம், திருவள்ளுவர் சிலை, இந்திய மரபுடைமையகம், நூலகம் போன்ற இடங்களில் விளையாட்டுக்கான துப்புகள் ஒளித்து வைக்கப் பட்டிருந்தன. கைபேசியில் இருக்கும் ஸ்கேனர் குறியீடை பயன்படுத்தி மாணவர்கள் விடையைக் கண்டறிந்தனர்.
ஆசிரியருடன் சேர்ந்து கும்மியும் அடித்து மகிழ்ந்தனர் மாணவர்கள். படங்கள்: உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்