விமான விபத்தின்போது பயணிகள் பாதுகாப்புடன் தப்பிக்கும் வகையில் புதிய தொழில்நுட்ப விமானத்தை உக்ரைன் நாட்டு பொறியாளர் வடிவமைத்துள்ளார். இவரது இந்தப் புதிய முயற்சி யால் விமான விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் பெருமளவு தவிர்க் கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. என்னதான் நவீன தொழில் நுட்பங்களுடன் விமானம் தயாரிக் கப்பட்டாலும் அவை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நொறுங்கி விழுவது, மலையில் மோதி விபத்திற்குள்ளாவது, நடுவானில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு தீப் பிடித்து எரிவது ஆகிய எதிர்பாராத விபத்துகள் ஏற்படுவது அண்மைக் காலமாக வழக்கமாகி வருகிறது.
இது உலக மக்களிடையே அச் சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் தலைநகர் கிவிவ் நகரில் ஆன்டனாவ் என்ற இடத்தில் உள்ள விமானத் தயாரிப்பு ஆலையில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார் விளாடிமிர் டாடாரென்கோ என்ற பொறியாளர். அண்மைக்காலமாக நடந்து வரும் விமான விபத்துகள், உயிர் பலிகள் இவரை மிகவும் உலுக்க, விலைமதிப்பில்லாத உயிர்களைக் காப்பாற்ற புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய விமானத்தை வடிவமைக்க முடிவு செய்தார்.