சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான படம் 'அரண்மனை'. திகில் படமான இது பெரும் வெற்றியைப் பெற்றது. இதையடுத்து தெலுங்கில் 'சந்திரகலா' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து இப்படத்தை வெளியிட்டனர். தெலுங்கிலும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. இதனையடுத்து 'அரண்மனை 2' என்ற பெயரில் சுந்தர்.சி இயக்கிய புதிய படமும் வெளியாக உள்ளது. இந்தப் படத்தையும் தெலுங்கில் 'கலாவதி' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து சுந்தர்.சி வெளியிடுகிறார். வரும் 23ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.
'கலாவதி' படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது. தெலுங்கானா திரைப் படத் தயாரிப்பாளர் தில்ராஜ் இசை குறுந்தகட்டை வெளியிட்டார். விழா வில் சுந்தர்.சி, குஷ்பு, நடிகர் சித்தார்த் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர். இந்த விழாவில் படத்தின் நாயகன் சித்தார்த் உற்சாகமாகப் பேசினார். "ரஜினி, கமல் ஆகியோரை வைத்துப் படம் தயாரித்த சுந்தர்.சி தற்போது என்னைப் போன்ற நடி கர்களை வைத்தும் வெற்றிப் படங்களை இயக்கி வருகிறார். பயமுறுத்தும் கலையில் அவர் கெட்டிக்காரர். திகில் படங்களை எப்படி எடுக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர்.
'அரண்மனை 2' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி.