இது திரைப்பட விமர்சகர்கள் மீது திரையுலகப் புள்ளிகள் பாயும் காலம் போலிருக்கிறது. கடந்த காலங்களில் விமர்சகர்கள் மீது பெரிய இயக்குநர்கள் முதல் நடிகர்கள் வரை பலரும் கோபப்பட்டுள்ளனர். இப்போது உதயநிதி ஸ்டா லினும் அந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளார். அண்மையில் அவர் நடித்து திரைக்கு வந்திருக்கும் படம் 'கெத்து'. விமர்சகர்களின் பார்வையில் இப்படம் மூன்றாவது இடத்தில்தான் இருக்கிறது என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இதையடுத்து தனது படத்தை விமர்சித்துள்ள விமர்சகர்களை தனது 'டுவிட்டர்' பக்கத்தில் ஏகத்துக்கு ஏசியுள்ளார் உதயநிதி. அவர் ஒருவரை மட்டும் குறிப்பிட்டு எழுதியிருக்கிறாரா, அல்லது 'கெத்து' படத்தை விமர்சித்த எல்லாரையும் திட்டி எழுதியிருக்கிறாரா? என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. "நான் விமர்சகர்களுக்காகப் படம் எடுக்கவில்லை. படம் பார்க்க வரும் மக்களுக்காகத்தான்," என்று கூறியுள்ளார் உதயநிதி. இதற்கிடையே, 'கெத்து' படத்தை அடுத்து இந்தியில் வெற்றி பெற்ற 'ஜாலி எல்.எல்.பி' படத்தின் மறுபதிப்பில் உதயநிதி நடித்து வருகிறார். 'கெத்து' படத்தின் ஒரு காட்சியில் உதயநிதி ஸ்டாலின், ஏமி ஜாக்சன்