சினிமா விமர்சகர்களை ஏசிய உதயநிதி

இது திரைப்பட விமர்சகர்கள் மீது திரையுலகப் புள்ளிகள் பாயும் காலம் போலிருக்கிறது. கடந்த காலங்களில் விமர்சகர்கள் மீது பெரிய இயக்குநர்கள் முதல் நடிகர்கள் வரை பலரும் கோபப்பட்டுள்ளனர். இப்போது உதயநிதி ஸ்டா லினும் அந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளார். அண்மையில் அவர் நடித்து திரைக்கு வந்திருக்கும் படம் 'கெத்து'. விமர்சகர்களின் பார்வையில் இப்படம் மூன்றாவது இடத்தில்தான் இருக்கிறது என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இதையடுத்து தனது படத்தை விமர்சித்துள்ள விமர்சகர்களை தனது 'டுவிட்டர்' பக்கத்தில் ஏகத்துக்கு ஏசியுள்ளார் உதயநிதி. அவர் ஒருவரை மட்டும் குறிப்பிட்டு எழுதியிருக்கிறாரா, அல்லது 'கெத்து' படத்தை விமர்சித்த எல்லாரையும் திட்டி எழுதியிருக்கிறாரா? என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. "நான் விமர்சகர்களுக்காகப் படம் எடுக்கவில்லை. படம் பார்க்க வரும் மக்களுக்காகத்தான்," என்று கூறியுள்ளார் உதயநிதி. இதற்கிடையே, 'கெத்து' படத்தை அடுத்து இந்தியில் வெற்றி பெற்ற 'ஜாலி எல்.எல்.பி' படத்தின் மறுபதிப்பில் உதயநிதி நடித்து வருகிறார். 'கெத்து' படத்தின் ஒரு காட்சியில் உதயநிதி ஸ்டாலின், ஏமி ஜாக்சன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!