நாகர்கோவில்: சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை தமிழக பாஜக தொடங்கியுள்ளதாக அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், பாஜக தலைமையிலான தேர்தல் கூட்டணி விரைவில் முடிவாகும் என்றார். "நாடாளுமன்றத் தேர்தலின் போது எங்கள் கூட்டணியில் இடம்பெற்றிருந்த அனைத்து கட்சிகளுடனும் தற்போது பேச்சு வார்த்தை நடத்தி உள்ளோம்.
எங்களுடன் பேச்சுவார்த்தை நடத் திய எல்லாக் கட்சிகளுமே பாஜக மீது நம்பிக்கை கொண்டுள்ளன. எனவே தேர்தல் கூட்டணி என்பது விரைவில் முடிவாகும். "கூட்டணியைப் பொறுத்தவரை இசை நாற்காலி போட்டி (மியூசிக் கல் சேர்) போன்றது. இசை நின்ற பின்னர்தான் யார் இணைவார்கள், யார் வெற்றி பெறுவார்கள் என் பதைக் கூற முடியும்," என்றார் இல.கணேசன்.