அச்சிட்டதில் தவறு: தீயிட்டுக் கொளுத்தப்பட்டது 30,000 கோடி ரூபாய்

மும்பை: பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் அச்சிடப்பட்ட 30,000 கோடி ரூபாய் (S$6.3 பி.) நோட்டு களை நாசிக்கில் உள்ள இந்தியப் பாதுகாப்பு அச்சகம் தீயிட்டுக் கொளுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய உச்ச வங்கியான ரிசர்வ் வங்கி ரூ.50,000 கோடிக்கு 1,000 ரூபாய் நோட்டுகளை அச்ச டிக்க இந்தியப் பாதுகாப்பு அச்சகத்தைக் கேட்டுக் கொண்டதாகத் தகவல்கள் கூறின. இதையடுத்து, ஹொசங்காபாத் தில் உள்ள இந்தியப் பாதுகாப்பு அச்சக, நாணய சாலைக் கழகத்தில் இருந்து தாட்களைப் பெற்ற நாசிக் அச்சகம் முதற்கட்டமாக 30,000 கோடி ரூபாயை அச்சிட்டு ரிசர்வ் வங்கியிடம் வழங்கியது.

அவற்றில் ரூ.20,000 கோடியை நாட்டிலுள்ள பல வங்கிகளுக்கு அது விநியோகித்துவிட்டது. இந்நிலையில், அந்த நோட்டுக ளும் புழக்கத்திற்கு வர, வழக்க மான ரூபாய் நோட்டுகளில் இருக் கும் பாதுகாப்பு ஊடுஇழை குறிப் பிட்ட வரிசை கொண்ட அந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் இல்லாதது கண்டு பலரும் புகார் செய்தனர். அத்துடன், அந்த நோட்டுகளில் மகாத்மா காந்தியின் நீர்வரிப் படம் (வாட்டர் மார்க்) தலைகீழாக இருந்ததையும் சிலர் சுட்டிக் காட்டினர். இப்படி மொத்தம் 190 புகார்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, குறிப்பிட்ட வரிசை எண்களைக் கொண்ட அந்நோட்டுகளின் விநியோகத்தை நிறுத்திவைக்கும்படி வங்கிக ளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத் தியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!