சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்களின் விருப்ப மனுக்கள் நேற்று முன்தினம் முதல் பெறப்படுகின்றன. மனுக்கள் விற்பனை அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் காலை தொடங்கியது. முதல்வர் ஜெயலலிதா சார்பில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்பமனு தாக்கல் செய்தனர்.
தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் திரளாக வந்திருந்தனர். படம்: ஊடகம்