வெற்றி பெறுபவர்கள் மீண்டும் இணைந்தால் வெற்றியும் பின் தொடர்ந்து வரும் என்பதை நிரூபிக்க வருகிறது 'கவலை வேண்டாம்'. தொடர்ந்து தங்களது நிறு வனத்தில் 'விண்ணைத் தாண்டி வருவாயா', 'கோ 2', 'யாமிருக்க பயமேன்' உள்ளிட்ட தரமான படங்களை வழங்கிவரும் ஆர்எஸ் இன்போடைன்மென்ட் நிறுவனம் தங்களது அடுத்த பிரம்மாண்டமான தயாரிப்பான 'கவலை வேண்டாம்' படத்தின் படப்பிடிப்பை குன்னூரில் துவங்கி உள்ளது.
இப்படத்தின் நாயகன் ஜீவா. அண்மைக் காலமாக ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ள பாபி சிம்ஹா, ஜீவாவுடன் இணைந்து நடிக்கிறார். ஜீவாவுக்கு ஜோடி காஜல் அகர்வால். மேலும் சுனைனா, '144' படத் தின் மூலம் அறிமுகமான சுருதி ராமகிருஷ்ணன், மந்த்ரா, பால சரவணன், மயில்சாமி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'யாமிருக்க பயமேன்' படத்தை இயக்கிய டிகே, மனித உணர்வு களின் குவியலாக இருக்கும் இந்தப் படத்தை இயக்குகிறார். 'கோ 2' படத்தின் மூலம் ரசிகர் களைக் கவர்ந்த லியான் ஜேம்ஸ் தான் இசை அமைப்பாளர். "உறவுகளும் உணர்வுகளும் மனித வாழ்வில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளன. அதே அளவுக்கு ஊடலும் கூடலும் ஒவ்வொருவரின் வாழ்விலும் இடம்பெறுகிறது. பிரிவைத் தொடர்ந்து வரும் இணைதல் மனித உறவுகளின் பயணத்தில் முக்கியமானது. 'கவலை வேண்டாம்' படத்தில் ஜீவா, காஜல் அகர்வால்.