நவீன இதயத் துடிப்பு கருவி இதய நோயாளிகளின் வாழ் நாளை நீட்டிக்க உதவும் புதிய வகை இதயத் துடிப்பு சாதனம் முதல் முறையாக சிங்கப்பூரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூர் தேசிய இதய நிலையம் நேற்று இதனைத் தெரி வித்தது. ஓராண்டு காலமாக ஆறு நாடுகளில் உள்ள 50 நோயாளி களிடையே நவீன இதயத் துடிப்பு சாதனம் பரிசோதிக்கப்பட்டது. அதில் நோயாளிகள் உயிர் வாழும் சாத்தியம் 92% கூடும் என்பதும் இதயம் செயலிழக்கும் அறிகுறிகள் 83% குறையும் என் பதும் தெரிய வந்தது.
சிங்கப்பூரில் சென்ற நவம்பர் மாதத்தில் இதய நோயால் பாதிக் கப்பட்ட 44 வயது ராஜமோகனுக்கு நவீன சாதனம் பொருத்தப்பட்டது. ஆசியாவிலேயே முதல் முறை யாக இத்தகைய நவீன சாதனத் தைப் பெற்றவர் இவராகத்தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 'Heartmate 3' என்று அழைக்கப்படும் இந்த நவீன சாதனம், புதிய மாற்று இதயத்துக் காகக் காத்திருக்கும் வேளையில் நோயாளியின் வாழ்நாளை நீட்டிக்க பேருதவியாக இருக்கும். தற்போது புதிய இதயத்துக் காகக் காத்திருப்பவர்களில் 30 விழுக்காட்டினர் இறந்துவிடு கின்றனர் என்று சிங்கப்பூர் தேசிய இதய நிலையம் தெரிவித்தது.
இடமிருந்து வலம்) உதவிப் பேராசிரியர் டேவிட் சிம், மூத்த மருத்துவ ஆலோசகர் சி. சிவதாசன், உதவிப் பேராசிரியர் லிம் சோங் ஹீ ஆகியோர் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இதயத் துடிப்பு சாதனம் பற்றி விளக்கமளித்தனர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்