கடும் குளிர்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புதுடெல்லி: கடும் குளிருடன் கூடிய பனிப்பொழிவு காரணமாக டெல்லியில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பள்ளிகளுக்கு நாளை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் இந்த ஆண்டும் வட மாநிலங்களில் பனிப்பொழிவும் குளிரும் நாளுக்கு நாள் அதிக ரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் இம்முறை குளிரின் அளவு மக்களால் தாங்கமுடியாத அளவில் உள்ளது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இதை யடுத்து பாலர் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நாளை வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. பிற பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வர வசதியாக காலையில் ஒரு மணி நேரம் தாமதமாகப் பள்ளிகள் திறக்கவும் மாலையில் ஒரு மணி நேரம் முன்னதாகவே பள்ளிகளை மூட வும் மாநில கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பனிப்பொழிவின் தாக்கம் தின மும் மதிய வேளை வரை அதிக மாக இருப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது. மேலும் ரயில் போக்கு வரத்தும் நிலைகுத்தியுள்ளது. இதற்கிடையே வசிப்பிடமின்றி அவதிப்படுபவர்களுக்கு அடைக் கலம் கொடுப்பதற்கு ஏற்ப டெல்லி யில் உள்ள சமூக ஆர்வலர்கள் தற்காலிக தங்குமிடங்களுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.

கடுமையான குளிர் அடித்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் அன்றாடப் பணியில் ஈடுபட்டுள்ள பால்காரர். படம்: ஏஎப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!