ஆயிரம்விளக்கில் ஜெயா புகழைப் பரப்பும் ‘நகை’ கற்பகம்

சென்னை: முதல்வர் ஜெயலலிதா கைதியாக சிறையில் போய் உட் கார்ந்திருந்தபோது தமிழகத்தை உலுக்கி எடுத்த அதிமுகவினரை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. அவர்களில் மிக முக்கிய ஒருவராக விளங்கிய பெண்தான் கற்பகம். இவர் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட மனு கொடுத்துள்ளார். ஜெயலலிதா சிறைக்குப் போன போதும் சரி, அதன்பின்னர் அவர் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோதும் சரி, கற்பகம்தான் பலருக்கும் சுடச்சுட செய்தியாக விளங்கினார்.

அவரது இந்த பிரபலத்துக்கு அவர் போட்டிருந்த நகைகள்தான் காரணம். அளவுக்கதிகமான நகைகளுடன் அவர் வளைய வந்த கோலம்தான் மக்கள் மனதில் இன்னும் மறக்கமுடியாமல் நிழலாடு கிறது. அத்தனை நகையிலும் ஜெயலலிதா ஜொலிக்கிறார் என்பதுதான் இதில் முக்கிய செய்தியே. சென்னை மாநகராட்சியின் 111வது வார்டு கவுன்சிலர்தான் கற்பகம். அவரது இரு காதுகளி லும் பெரிய தோடு தொங்குகிறது. அதில் ஜெயலலிதாவுடன் இரட்டை இலையையும் கற்களால் பொறித் துள்ளார். அவரது மூக்கை விட பெரிதாக இருக்கிறது மூக்குத்தி. அதில் மட்டும்தான் ஜெயலலிதா படம் இல்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!