கடந்த ஞாயிறு மாலை உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் எழுத்தாளர் மா. அன்பழகனின் ஒன்பது நூல்களின் அறிமுக விழா நடந்தேறியது. மேடைக்குச் செல்லாமல் மக்களோடு மக்களாக கலந்துகொண்டு டாக்டர் எம். ஏ. காதர் தொய்வின்றி விழாவை நடத்திச் சென்றார். நூல்கள் பற்றிய தங்கள் கருத்துகளை 21 பேர் மன்றத்தில் பகிர்ந்துகொண்டனர். நிதி, சட்ட மூத்த துணை அமைச்சர் குமாரி இந்திராணி ராஜா நூல்களை வெளியிட்டார். மாணவர் கடித இலக்கியமான 'கூவி அழைக்குது காகம்' எனும் நூலைச் சுமார் 150 மாணவர்கள் படித்து அதனால் பெற்ற பலன்களை இடையே கேள்விக்குப் பதிலாக சொன்னதும் உமறுப்புலவர் பள்ளியில் அந்த மாணவர்கள் கூடி படித்ததும் விவாதம் செய்ததும் நிலையத் தலைவர் இரா. அன்பரசு ஏற்பாட்டில் வெண்திரையில் படம்பிடித்துக் காண்பிக் கப்பட்டது.
மாலை, பொன்னாடை, நினைவுப் பொருள், தமிழ் வாழ்த்து, வரவேற்புரை, தலைமையுரை, வாழ்த்துரை, சிறப்புரை, ஏற்புரை, முதல் பிரதி பெறுதல் என்பன போன்ற சம்பிரதாயங்கள் ஏதும் இல்லாமல் கலந்துரையாடலாக வும் கேள்வி பதிலாகவும் விழா வித்தியாசமாக நடைபெற்றது.
நூலாசிரியர் மா. அன்பழகன் அருகில் நிற்க அமைச்சர் இந்திராணி ராஜா மாணவர்களுக்கு நூல்களை வழங்குகிறார். படம்: மா. அன்பழகன்