சிட்னி: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது. டோனி தலைமையிலான இந்திய அணி 4 போட்டியிலும் தோற்று மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இதனால் நாளைய ஆட்டத்திலாவது இந்திய அணி வெற்றி பெற்று ஆறுதல் பெறுமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப் படுகிறது. கேன்பெராவில் நடந்த 4வது ஆட்டத்தில் வெற்றி பெற இருந்த வாய்ப்பை இந்திய வீரர்கள் வீணடித்துவிட்டனர். டோனியின் தவறான அணுகுமுறை பாதிப்பை ஏற்படுத்தியது. புதுமுக வீரர்கள் குர்கெரத் சிங், ரிஷிதவான் ஆகியோர் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வில்லை. இருவரும் நாளைய ஆட்டத்தில் நீக்கப்படலாம். கடந்த இரண்டு போட்டி யிலும் நீக்கப்பட்ட அஸ்வின் இடம் பெறுவார் என்று தெரிகிறது.
பேட்டிங்கில் விராட் கோஹ்லி, ரோகித் சர்மா ஆகியோர் மட்டுமே நல்ல நிலையில் உள்ளனர். ரகானே காயம் அடைந்து இருப்பதால் இன்று ஆடுவாரா என்பது உறுதியில்லை. நான்கு ஆட்டத்திலும் வென்று முத்திரை பதித்த ஆஸ்திரேலியா இந்தப் போட்டியிலும் வென்று 5-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்ச்சிக்குத் தள்ளும் ஆர்வத் துடன் உள்ளது. சொந்த மண்ணில் தொடர்ச்சி யாக 18 வெற்றியைப் பெற்ற அந்த அணி அதைத் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் போராடும். 2014 நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவிடம் தோற்ற பிறகு ஆஸ்திரேலியா இதுவரை சொந்த மண்ணில் வீழ்ந்தது இல்லை. இன்றைய ஆட்டம் காலை 8.50 மணிக்குத் தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ், தூர்தர்சனில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.