‘காவடியாம் காவடி’ ஒலிவட்டு வெளியீடு

தைப்­பூ­சத்தை ஒட்டி முரு­க­னின் பாடல்­கள் அடங்­கிய 'காவ­டி­யாம் காவடி' ஒலி­வட்டு இம்­மா­தம் 16ஆம் தேதி, சனிக்­கிழமை தேங்க் ரோடு அருள்­மிகு தெண்டா­யுதபாணி கோயிலில் வெளி­யி­டப்பட்டது. இந்த ஒலி­வட்டைத் தயா­ரித்து அதி­லுள்ள எட்டுப் பாடல்­களை­யும் பாடி­ய­வர் திரு பரசு கல்யாண். இவர் சிங்கை­யில் பக்தி இசைக் கச்­சே­ரி­களில் பாடி­யி­ருக்­கிறார். ஏழு வயதில் பாட ஆரம்­பித்த இவர் கலை­மா­மணி திரு வீரமணி ராஜூவின் வழி­காட்­டு­த­லோடு தெய்­வீ­கப் பாடல்­கள் பாடு­வ­தில் புலமை பெற்­ற­வர். 'வீரைய்யா', 'ஆனந்தம் ஆனந்தமே' போன்ற திரைப்­ப­டங்களி­லும் பின்­ன­ணிப் பாடல் பாடி­யி­ருக்­கிறார். 'பக்தி அலை' என்ற பக்திப் பாடல்­கள் ஒலி­வட்டை முதலில் வெளி­யிட்ட திரு பரசு கல்யாண் அடுத்­து சுவாமி ஐயப்­பன் பாடல் ஒலி­வட்டை வெளி­யிட்­டார்.

'காவ­டி­யாம் காவடி' பரசு கல்­யா­ணின் மூன்றா­வது ஒலி­வட்டு வெளி­யீ­டா­கும். 'காவ­டி­யாம் காவடி' ஒலி­ வட்­டின் இசை அமைப்­பா­ளர் திரு விஜய் சங்கர். தொழில்­முறை இசை அமைப்­பா­ள­ரான இவர் ஐம்ப­துக்­கும் மேற்பட்ட தொலைக்­காட்சி நாட­கங்களின் தலைப்­புப் பாட­லுக்கு இசை அமைத்த அனு­ப­வம் உடை­ய­வர்.

இடப்பறத்தில் 'காவடியாம் காவடி' பாடலாசிரியர் திரு தாம் சண்முகம், நடுவில் இசை அமைப்பாளர் திரு விஜய் சங்கர், வலப்புறத்தில் பக்தி இசைப் பாடகர் பரசு கல்யாண். படம்: திரு தாம் சண்முகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!