வெற்றி என்பதற்கு ஒரேமாதிரியான வரையறையை வகுத்துக்கொண்டு அதனை அடைவதற்கு கண்மூடித்தனமாக முயற்சி செய்யக்கூடியவர்களாக இருக்க சிங்கப்பூரர்கள் முற்பட்டால், அது மிகவும் வருத்தமளிக்ககூடியது என்று பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார். 'செயின்ட் கேலன் சிம்போசியம் சிங்கப்பூர் ஃபோரம்' எனும் நிகழ்ச்சியில் துவக்கவுரையாற்றியபோது திரு சான் இவ்வாறு குறிப்பிட்டார். சுவிட்சர்லாந்துக்கு வெளியே இந்நிகழ்ச்சி முதன் முறையாக நடத்தப்படுகிறது. அந்த நிகழ்வில் பொருளியல் வளர்ச்சி குறித்து உரையாற்றியதுடன் பார்வையாளர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார் திரு சான்.
மானுடவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களைவிட அறிவியல், கணிதம் ஆகிய துறைகளில் பயில்வோருக்கும் ராஃபிள்ஸ் கல்வி நிலையம் போன்றவற்றில் பயில்வோருக்கும் சிங்கப்பூர் சமூகம் சாதகமாக இருப்பது குறித்த அக்கறையை நிகழ்ச்சியில் பங்கேற்ற சில மாணவர்கள் எழுப்பினர்.